Share On
மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Admin 1 day ago தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி சத்யா (40). அதே பகுதியைச் சேர்ந்த தேவ சிகாமணியின் மனைவி அமுதா (45). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடிக்கு வந்துவிட்டு, மீண்டும் நாசரேத்திற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தனர். அமுதா இருசக்கர வாகனத்தை ஓட்ட, சத்யா பின்னால் அமர்ந்திருந்தார்.

தூத்துக்குடி அருகே பாளையங்கோட்டை சாலையில் உள்ள வாகைகுளத்திலிருந்து முடிவைத்தானந்தல் சாலையில் திரும்ப முயன்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சத்யா மற்றும் அமுதா ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் அதிவேகமாகத் தப்பிச் சென்றது.

இதுகுறித்துத் தகவலறிந்த புதுக்கோட்டை காவல் நிலையப் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிய காரைக் கண்டறிய அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் நாசரேத் மற்றும் புதுக்கோட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

தூத்துக்குடி 3வது வார்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்: புதிய ரேஷன் கடை திறப்பு; கவுன்சிலர் ரெங்கசாமி திறந்து வைத்தார்

16 hours ago

பூலித்தேவன் புகழ் போற்றிய திமுக: கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை

18 hours ago

தூத்துக்குடியில் விதிகளை மீறிய 4 ராஜஸ்தான் லாரிகள் சிறைபிடிப்பு: லாரி உரிமையாளர்கள் அதிரடி!

1 day ago

நிலம் ஒதுக்கியும் வீட்டு மனை வழங்கவில்லை: தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் வேதனை; 39 ஆண்டுகளாக தொடரும் கோரிக்கை !!

3 days ago

தூத்துக்குடி குறுக்குசாலை கீதாஜீவன் கல்லூரியில் மாணவர் பேரவை நிர்வாகிகள் பதவியேற்பு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பங்கேற்பு

3 days ago

மரக்கன்று நடும் விழா பெயரில் வசூல் வேட்டை? தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மீது வியாபாரிகள் புகார்

4 days ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement