தூத்துக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவனின் 311-வது பிறந்தநாள் விழா வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது.
இதையொட்டி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பூலித்தேவனின் படத்திற்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநகர துணைச் செயலாளர்கள் கீதாமுருகேசன், பிரமிளா, மாநகராட்சி மண்டலத் தலைவர் வழக்கறிஞர் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.