தூத்துக்குடி குறுக்குச்சாலை கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ நிர்வாக பேரவை பதவியேற்பு விழா கல்லூரியில் நடைப்பெற்றது. கல்லூரி செயலாளர் ஜீவன்ஜேக்கப் தலைமை தாங்கினாா். கல்லூரி முதல்வர் இளங்குமரன் வரவேற்புரையாற்றினார்.
முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி முதல்வர் முனைவர் ரூபா, கல்லூரி முதல்வர் முனைவர் இளங்குமரன் ஆகியோர் இணைந்து குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர்.
ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி முதல்வர் முனைவர் ரூபா பேசுகையில் மாணவர்கள் தங்களது தலைமைப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் கல்வி, ஒழுக்கம் மற்றும் சமூகசேவையில் பிற மாணவர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ வேண்டும் என்று பேசினாா்.
முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த தலைமைத்துவ வாய்ப்பை பயன்படுத்தி, கல்லூரியின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் நலனுக்கும் ஓற்றுமையாக பாடுபடவேண்டும் என வலியுறுத்தினார்
பதவியேற்பு விழாவில் தலைவராக மாரிலோகேஷ், துணைத்தலைவராக அனுஸ்ரீமா, செயலாளர் சிவமாதேஷ், இணைச்செயலாளராக பரலோக அஸ்மிதா பொருளாளராக விண்ணரசி, மகளிர் பிரதிநிதிகளாக பிருந்தா சத்யா உமாமகேஸ்வரி மாரிச்செல்விமா, அகிலன் சண்முகநாதன் ஆகிய 3ம் ஆண்டு மாணவா்கள் புதியபேரவை நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
விழாவில் கல்லூாி ஆசிாியா்கள் , மாணவ மாணவியா்கள் உள்பட பலர்் கலந்து கொண்டனா். அதன்பின் மாணவ நிர்வாகப் பேரவைத் தலைவர் மாரிலோகேஷ் ஏற்புரையாற்றினார். மாணவர் நிர்வாக பேரவை செயலாளர் சிவமாதேஷ் நன்றியுரையாற்றினாா்.